தெய்வீக கிராம நிகழ்வானது மலையாளயபுரம் வரசித்தி விநாயகர் ஆலயம் வளாகத்தில் நடைபெற்றது .
மலையாளபுரம் கிராமசேவையாளர் வசந்தரூபன் விஜிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக செல்வானந்தம் உதயபவன் (அதிபர்- கிளி/அன்னை சாரதா தேவி வித்தியாலயம்) வேலாயுதம்பிள்ளை மண்டலேஸ்வரன் (அதிபர் - கிளி/திருவள்ளுவர் வித்தியாலயம்) கலைமாமணி வல்லிபுரம் ஏழுமலைபிள்ளை நாகராசா றிசாந்தன் (வரசித்தி விநாயகர் ஆலய பரிபாலனசபைத் தலைவர் ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) உதவி மாவட்ட செயலாளர்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர்.நிர்வாக உத்தியோகத்தர், திணைக்கள உத்தியோகத்தர்கள்,பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தெய்வீக கிராமம் செயற்திட்டம் என்பது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், மதகுருமார்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் கிராமப்புறங்களில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் ஆன்மிக மையங்களை மையப்படுத்தி, அறநெறி கல்வி, சமூக அபிவிருத்தி, உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு சமூக மற்றும் சமய மேம்பாட்டுத் திட்டமாகும்.
இந்தத் திட்டம், கிராம மக்களின் ஆன்மிக மற்றும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பாரம்பரிய கலாசாரத்தையும் நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமய மற்றும் அறநெறி மேம்பாடு,அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குப் புத்தகங்கள், உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல், கோயில்களில் சிறப்புப் பூசைகள், கோமாதா பூசை போன்றவற்றை நடத்துதல்.
சமூக நல உதவிகள்,வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல்.
பாரம்பரிய நிகழ்வுகள், கொடியேற்றம், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சைவப்புலவர் கூற்றுகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
தற்போதய சூழலில் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக விரோத செயல்களிலிருந்து விடுவதற்கான வழியாக இது அமைகின்றது.

இலங்கை திருநாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (04) திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,சிரேஸ்ர சாரண உறுப்பினர்கள்,சாரண மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய பவணி மற்றும் சாரணர் மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களின் மரியாதை அணிவகுப்பு நடை பவனியுடன் ஆரம்பித்த சுதந்திர தின நிகழ்வில் தாய்த்திரு நாட்டின் தேசிய கொடி அரசாங்க அதிபரினால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரைகளை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையுரை இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பயன்தரு மரக்கன்றுகள் மாவட்டச்செயலக வளாகத்தில் நடப்பட்டதோடு மாவட்டச்செயலகத்தின் வெளிப்புற சூழலில் சிரமதான நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

இந்துக்களின் முக்கியமான சமய நிகழ்வுகளில் ஒன்றான தைப்பூச திருநாளில் (11) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஏடுதொடக்கல் நிகழ்வு பக்திபூர்வமாகவும் சிறப்புறவும் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான ஏடுதொடக்கல் வைபவம் முறையாக இடம்பெற்றது. கல்வியின் தொடக்கமாகவும், அறிவின் ஒளி பரவலாகவும் அமைந்த இந்நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

படங்கள்:
 

இந்துக்களின் முக்கியமான சமய நிகழ்வுகளில் ஒன்றான தைப்பூச திருநாளில் (11) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஏடுதொடக்கல் நிகழ்வு பக்திபூர்வமாகவும் சிறப்புறவும் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான ஏடுதொடக்கல் வைபவம் முறையாக இடம்பெற்றது. கல்வியின் தொடக்கமாகவும், அறிவின் ஒளி பரவலாகவும் அமைந்த இந்நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

படங்கள்:
 
கிளிநொச்சி மாவட்டத்தில் தீர்க்கப்படாமல்  நீண்டகாலமாக நிலவி வரும் காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக காணி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் நீண்டகாலமாக வசித்து வருகின்ற குடியிருப்பாளர்களுக்குரிய  அனுமதிப்பத்திரம் வழங்கல், ஹிமிகம திட்டத்தின் கீழ் காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கல், LRC (Land Reform Commission) காணிகள் தொடர்பான விடயங்கள், மேலும் நீண்டகால குத்தகை அடிப்படையிலான காணி வழங்கல் போன்ற முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. முன்னதாகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாவட்ட மட்ட கலந்துரையாடல்கள், அமைச்சர் மட்ட மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான சந்திப்புகள் மற்றும் அரசாங்க அதிபர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி உரிமைகளை உறுதி செய்வது, நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் உள்ள LRC காணி விவகாரங்கள், அனுமதிப்பத்திரங்களிலிருந்து நிரந்தர உரிமை அளிப்பு பத்திரம் வழங்கும் நடைமுறை ஆகியவை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டதோடு தீர்வின் பொருட்டு நடமாடும் சேவை உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டன. இந் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இக் கலந்துரையாடல் அமையப்பெற்றிருந்தது. அதிக நிலுவையில் உள்ள காணி கோப்புகளை விரைவாக பரிசீலித்து, சட்டப்பூர்வமான தீர்வுகளை வழங்குவது, பொதுமக்கள் எதிர்கொள்ளும் தாமதங்களை குறைப்பது என்பதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்தது.எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று, கிளிநொச்சி மாவட்ட மக்களின் காணி தொடர்பான நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், சிரேஸ்ட நில அளவை உத்தியோகத்தர், மாகாண காணி அலுவலக சிரேஸ்ட காணி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
படங்கள்: