கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதநேய அடிப்படையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இராணுவத்தினரும், கிராம சேவையாளர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கண்டாவளை பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் விசுவமடு 553 படைப்பிரிவு மாநாட்டு மண்பத்தில் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன்,அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K அழகக்கோன், 553வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் M.P.J Muthunayaka உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமது மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். அனர்த்த காலங்களில் இவ்வாறான ஒருங்கிணைந்த சேவைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் பெரும் பலமாக அமைகின்றன.
 
படங்கள்: