பாதுகாப்பான வீதிப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான செயலமர்வு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் பாதுகாப்பான வீதிப்போக்குவரத்து தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் திருவரங்கன் மகேந்திரன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மேலாண்மை மற்றும் தளபாட பொறியியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர், போக்குவரத்து நிபுணர் Dr. டி. சிவகுமார், DR. யூடி ஜெயகுமார், MBBS (இலங்கை), D.PSY (கொழும்பு), FMH (கனடா),போக்குவரத்து நிபுணர் பொறியியலாளர் Dr. திஸ்ஸ யூ லியனகே, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர், வாகன மேலாண்மைப் பிரிவு, நோர்வே பொது சாலைகள் நிர்வாகம், பெர்கன் நகரம் அலோசியஸ் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர். குறித்த செயலமர்வில் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் முதல்வர்கள்,றோட்டறிக்கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
படங்கள்:





