இந்துக்களின் முக்கியமான சமய நிகழ்வுகளில் ஒன்றான தைப்பூச திருநாளில் (11) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஏடுதொடக்கல் நிகழ்வு பக்திபூர்வமாகவும் சிறப்புறவும் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான ஏடுதொடக்கல் வைபவம் முறையாக இடம்பெற்றது. கல்வியின் தொடக்கமாகவும், அறிவின் ஒளி பரவலாகவும் அமைந்த இந்நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
படங்கள்:





