கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல் மற்றும் மாவட்டத்தின் நிலவும் ஏனைய காணிப்பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரச்சினைகளுக்கான தீர்வுக்குரிய வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டன. அத்துடன் மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து விடுவித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. மேலும் குறிப்பாக நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இருக்கின்ற மக்களது காணிகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு, பயிர்ச்செய்கைக்கு தேவையான காணிகள், அபிவிருத்திக்கு தேவையான காணிகளை விடுவிப்பதற்குரிய இவ் ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பிரதேச செயலாளர்கள், மாவட்ட வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள அலுவலர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படங்கள்:





