உள்நாட்டு போர்,வன்முறைகள் மற்றும் கலவரம் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கான "பொது மக்கள் சொத்தழிவு நட்டஈட்டுக்கொடுப்பனவு" மற்றும் போரின் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பொது மக்களுக்கான "கடும்பாதிப்புற்றோர் நிவாரண கொடுப்பனவு" வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராமசேவையாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாத பொது மக்கள் குறித்த கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
படங்கள்:





