சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.திருமதி ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசீஜா ராமன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரம் அவர்களின் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (28.01.2026) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 1000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 181 குடும்பங்களுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டன. இதற்காக ரூபா ஒரு கோடியே 46 இலட்சத்து 24 ஆயிரத்து 400 செலவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட உதவிகள் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சாள்ஸ் விஜயரட்ணம் ஜினோத், திட்ட ஏற்பாட்டாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இ.ஜெயசேகரம், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படங்கள்: