2025 ஆம் ஆண்டிற்கான இறுதி நிதி அறிக்கையினை சமர்ப்பிப்பதில் சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் குறித்த நேரத்தில் அறிக்கையை அனுப்புதல், நிதி ஆவணங்களை சிறந்த முறையில் பேணுதல் போன்ற விடயங்களில் வினைத்திறனாக செயற்பட்டமைக்கான பாராட்டினை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது.b2025 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் 24.01.2026 மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் நிதி நிர்வாகம் மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டன. கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்களில் நிதி முகாமைத்துவத்தினை சிறப்பாக மேற்கொண்டமைக்காக உத்தியோகத்தர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். கலந்துரையாடலின் நிறைவில் 2025 ஆம் ஆண்டிற்கான இறுதி நிதி அறிக்கையினை சமர்ப்பிப்பதில் சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் குறித்த நேரத்தில் அறிக்கையை அனுப்புதல், நிதி ஆவணங்களை சிறந்த முறையில் பேணுதல் போன்ற விடயங்களில் வினைத்திறனாக செயற்பட்டமைக்கான பாராட்டு சான்றிதழினை மாவட்ட அரசாங்க அதிபர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயளாளர் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஆகியோரிடம் கையளித்து பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
படங்கள்:





