அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில்
அரசகரும மொழிகள் திணைக்களத்தினால்
நடாத்தப்பட்டு வருகின்றன.
உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்தும் நோக்கத்திற்கமைய கிளிநொச்சி மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட சிங்கள மொழி பயிற்சிநெறியின் இறுதிநாள் நிகழ்வு மாவட்டச்செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது சிங்கள பாரம்பரிய கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உத்தியோகத்தர்களினால் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
150 மணித்தியாலங்களைக் உள்ளடக்கிய இக் கற்கை நெறியை 54 உத்தியோகத்தர்கள் சிறப்பாக கற்று நிறைவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் பயிற்சியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்ததோடு
இரண்டாவது மொழியினை கற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் அரச பணியில் அதன் முக்கியத்துவத்தினையும் குறிப்பிட்டதோடு தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு உத்தியோகத்தர்களின் ஆளுமை, செயற்திறனில் நிச்சயமாக ஓர் மாற்றத்தினை கொண்டு வரும் என்பதனை தனது உரையில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந் நிகழ்வில் சிங்கள கற்கைநெறியினை வழங்கிய வளவாளர் K.P.R.N.Ekanayakke,மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,பயிற்சியினை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள்,மாவட்டச்செயலக ,பிரதேச செயலக மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மாவட்ட ஊடகப்பிரிவு