பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை (21.01.2026) பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தொழிற்சாலைக்கான பெயர்ப்பலகை மற்றும் அடிக்கல் ஆகியன பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணியாளர்களால் திறக்கப்பட்டு, அடிக்கல் நடுகை செய்யப்பட்டமை உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வின் இறுதியில் நிகழ்வின் ஞாபகார்த்தமாக மரநடுகை இடம்பெற்றது.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் மரகன்றுகளை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன்,முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர்கள், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்
நாட்டிவைத்தனர்.





