காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை அமையவுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் (20.01.2026) களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு கிராமிய அபிவிருத்தி பணியகம் 75.63மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய செய்கைக்காக ஒதுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து குறித்த திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
குறித்த விவசாய சமூக பண்ணையில் 20 பச்சை வீடுகளும், 10 வலை வேலித் துண்டங்களும் அமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக குறித்த பகுதியினை சேர்ந்த விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பயிர்ச்செய்கை மேற்கொள்ள சந்தர்ப்பமளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து சுழற்சி முறையில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.