தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமூக பொறுப்புணர்வுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் வெளிப்புறப் பகுதியை சுத்தமாகவும் ஒழுங்காகவும் மாற்றும் வகையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பணியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒருமித்துப் பங்கேற்றனர்.